search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பள்ளி மாணவி"

    • சிறார் குறும்படங்களை பொறுத்தவரை தனி நபர், குழு உள்ளிட்ட 7 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது.
    • நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்த மாணவி கீர்த்தனா மாநில அளவில் இறுதி போட்டியில் பங்கேற்றார்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி சாரா செயல்பாடுகளாக 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலக்கிய மன்றம், சிறார் குறும்படம், வானவில் மன்றம், வினாவிடை சார்ந்த போட்டிகள், பள்ளி, ஒன்றிய, மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.

    சிறார் குறும்படங்களை பொறுத்தவரை தனி நபர், குழு உள்ளிட்ட 7 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. திரைப்படத்தின் ஒரு காட்சியை இயக்குதல் என்ற தனிநபர் பிரிவில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் அ.குரும்பபட்டி நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்த மாணவி கீர்த்தனா மாநில அளவில் இறுதி போட்டியில் பங்கேற்றார்.

    பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 14 பேர் கொண்ட இவரது குழுவிற்கு முதல் இடம் கிடைத்தது. முன்னதாக கல்விச் சுற்றுலாவாக மாணவியை அமெரிக்கா அழைத்துச் செல்வதாக தமிழக அரசு அறிவித்தது. இதற்காக பாஸ்போர்ட், விசா தயாரானபோதும், பள்ளி கல்வித்துறை தாமதத்தால் அவரால் அமெரிக்கா செல்ல முடியவில்லை. இதனைத் தொடர்ந்து மாணவி கீர்த்தனா இன்று ஜப்பானுக்கு புறப்படுகிறார்.

    தனது குடும்பத்தினருடன் சென்னை சென்ற கீர்த்தனா தனது வெற்றி குறித்து கூறுகையில், மாவட்ட அளவில் தேர்வான எனக்கு கடந்த ஆண்டு சென்னையில் பயிற்சி முகாம் நடந்தது. அங்கு முன்னணி இயக்குனர்கள் பயிற்சி அளித்தனர். இதனையடுத்து 14 பேர் கொண்ட குழு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட நகருக்கு செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. அதன் பிறகு தற்போது ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்கிறேன். பிளஸ்-2 விற்கு பின்பு அரசு திரைப்பட கல்லூரியில் இயக்குனர் பிரிவில் பட்டம் படித்து திரைத்துறை இயக்க நுட்பங்களில் புதுமையை புகுத்துவதை லட்சியமாக கொண்டுள்ளேன். தற்போது ஜப்பானுக்கு செல்வதில் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார். 

    • அரியலூர் அரசு பள்ளி மாணவி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்
    • ஆசிய செஸ் போட்டியில்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன். நெசவு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி அன்புரோஜா. குழந்தைகளுக்கு டியூஷன் நடத்தி வருகிறார். தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இளையமகள் சர்வாணிகா (வயது 7). இவர் அப்பகுதியில் உள்ள மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். சர்வாணிகா, செஸ் போட்டியில் ஆர்வம் அதிகம் கொண்டதால் பெற்றோர் அவருக்கு உரிய பயிற்சியினை அளித்தனர். ஒன்றிய அளவிலான மண்டல அளவிலான, மாவட்ட அளவிலான போட்டிகள் என பல்வேறு போட்டிகளில் 7 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்ட சர்வாணிகா வெற்றி பெற்ற சாதித்து உள்ளார்.

    இந்நிலையில் இலங்கையில் கடந்த 3-ம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்ற 16-வது ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற சர்வாணிகா 3 பிரிவுகளிலும் வெற்றி பெற்று சா தனை படைத்துள்ளார். 7 வயதுக்குட்பட்டோருக்கான முதல் பரிவில் நடைபெற்ற 7 சுற்றுகளிலும் வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டாம் பிரிவல் நடைபெற்ற 7 சுற்றுகளிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து நடைபெற்ற மூன்றாம் பிரிவில் 9 சுற்றுகளில் வெற்றி பெற்றார்.இதன் மூலம் 3 பிரிவுகளில் நடைபெற்ற 23 ஆட்டங்களிலும் வெற்றியை பெற்று, ஆசிய அளவில் புதிய சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். 3 பிரிவுகளிலும் த ங்க பதக்கங்கள் மற்றும் அணிக்கான பதக்கங்கள் உட்பட மொத்தம் 6 தங்கப்பதக்கங்களையும், 3 கோப்பைகள் மற்றும் அணிக்கான கோப்பைகள் உட்பட மொத்தம் 5 கோப்பைகளையும் வென்றுள்ளார்.

    அரியலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்று ஆசிய அளவில் புதிய சாதனை படைத்துள்ள 7 வயது மாணவி சர்வாணிகாவுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    • கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட உண்டு உறைவிட பள்ளியில் தங்கி பிளஸ் 2 படித்து முடித்தார்.
    • அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் தேவநாத சுவாமி நகர், ஜி .ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பிருந்தா. இவர் விழுப்புரம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை படித்தார். பின்பு அங்கு கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட உண்டு உறைவிட பள்ளியில் தங்கி பிளஸ் 2 படித்து முடித்தார். பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் படத்தில் 99 மதிப்பெண்கள், ஆங்கிலம் 94 மதிப்பெண்கள், கணிதம் இயற்பியல் வேதியல் மற்றும் உயிரியியல் ஆகிய நான்கு பாடத்திலும் தலா 100 மதிப்பெண்கள் என 593 மதிப்பெண்கள் பெற்றார்.

    இந்த ஆண்டிற்கான அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியலில், அரசு பள்ளி அளவில் பிருந்தா கட்ஆப் 200க்கு 200 எடுத்து முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். நீட் தேர்வில் 467 மார்க் எடுத்து இவர் அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். முதலிடம் பிடித்த மாணவிக்கு முதன்மை கல்வி அதிகாரி மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ×